Nagaratharonline.com
 
மதகுபட்டி மற்றும் கல்லல் : பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளைகள்  Nov 23, 13
 
மதகுபட்டி மற்றும் கல்லல் ஆகிய இடங்களில் ATM வசதியுடன் கூடிய பேங்க் ஆப் இந்தியாவின் வங்கி கிளைகளை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.

அரசின் கொள்கைகளை நிறைவேற்ற வேண்டியது வங்கிகளின் பொறுப்பாகும். வங்கிகள் அதிகம் வந்தால் தான் கடன் அதிகம் கிடைக்கும், கடன் கிடைத்தால் தான் தொழில் வளர்ச்சி ஏற்படும். எனவே தைரியமாக கடன்களை வங்கிகளில் கேட்டுப் பெற்று தொழிலில் வளர்ச்சி கண்டு அவற்றை முறையாக திரும்பச் செலுத்த வேண்டும் என்றார்.