Nagaratharonline.com
 
புதுக்கோட்டை பேருந்து நிலையம் இடமாற்றம்  Nov 22, 13
 
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வெள்ளிக்கிழமை முதல் அரசுக்கல்லூரி எதிரே தாற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டது. இது தொடர்பாக உரிய முன்னறிவிப்பு இல்லாததால் பொதுமக்கள் சிரமப்பட நேரிட்டது.

நகராட்சியின் நூற்றாண்டு விழாவுக்காக, ரூ. 50 கோடி சிறப்பு நிதியை தமிழக அரசு ஒதுக்கியது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைப்படி புதுகை அரசு மகளிர் கலைக்கல்லூரி எதிரில் உள்ள காலி இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு ரூ. 12 லட்சத்தில் தாற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் அது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பேருந்து நிலைய இடமாற்றம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாததால், வெள்ளிக்கிழமை வெளியூர்களில் இருந்த வந்த பொதுமக்கள் சிரமப்பட நேரிட்டது.