Nagaratharonline.com
 
சிவகங்கை மாவட்ட விரைவு பட்டா மாறுதல் முகாம்  Nov 22, 13
 
மானாமதுரையில் விரைவு பட்டா மாறுதல் முகாம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜாராமன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல் கேட்டு 1200 மனுக்கள் பெறப்பட்டன. முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தவர்களுக்கு முகாமில் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

அப்போது ஆட்சியர் பேசியதாவது: பட்டா மாறுதல் கேட்டு முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தவர்களுக்கு இப்போது பட்டா மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மற்றவர்களுக்கு விசாரணை நடத்தி 30 நாள்களுக்குள் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரப் பதிவின்போது பத்திர எழுத்தர்கள் கவனத்தோடு தேவையான ஆவணங்களைப் பெற்று பத்திரங்களை பதிவு செய்தால் பட்டா மாறுதல் செய்வது சுலபமாகும். பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் மனுவில் கோர்ட்பீ ஸ்டாம்ப் ஒட்ட வேண்டிய கட்டாயமில்லை. வெள்ளைத்தாளில் எழுதி மட்டும் விண்ணப்பிக்கலாம் என்றார்.