Nagaratharonline.com
 
கீழச்சிவல்பட்டி ஆர்.எம்.மெய்யப்பச் செட்டியார் மெட்ரிக். பள்ளியில் பொங்கல் விழா  Jan 14, 10
 
திருப்புத்தூர்,​​ ஜன.13:​ சிவகங்கை மாவட்டம்,​​ கீழச்சிவல்பட்டி ஆர்.எம்.மெய்யப்பச் செட்டியார் மெட்ரிக்.​ பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.​ ​

​ ​ பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவுக்கு பள்ளி நிறுவனர் எஸ்.எம்.​ பழனியப்பன் தலைமை வகித்தார்.​ இளையாத்தங்குடி ஜமீன்தார் ராஜா,​​ அழகப்பன்,​​ பட்டையா,​​ லெட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.​ ​ சிறப்பு விருந்தினராக சிவநெறிக் கழகத் தலைவர் பிள்ளையார்பட்டி பிச்சைக் குருக்கள்,​​ திருப்புத்தூர் சிறிய பள்ளிவாசல் இமாம் அப்துல்காதர்,​​ பங்குத்தந்தை தாமரைச்செல்வன்,​​ ஆகியோர் கலந்து காண்டு குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுடன் சர்க்கரைப் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.​ சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.​ முன்னதாக பள்ளி முதல்வர் குணாளன் வரவேற்றார்.​ பள்ளித் தலைமை ஆசிரியை ஆர்.மணி நன்றி கூறினார்.

Source: dinamani Jan 15