Nagaratharonline.com
 
பாகனேரி, பழையவளவில் நூறு ஆண்டுகள் பழமையான வீடு தீப்பற்றியதில் பல லட்சம் சேதம்  Nov 13, 13
 
பாகனேரி, பழையவளவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி சரஸ்வதி ஆச்சி. இவர், தனது மகன் வீரமணியுடன், நூறு ஆண்டுகள் பழமையான, பாரம்பரிய வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த வீட்டின் ஒரு பகுதியை மட்டும், சலவை தொழிலாளி பில்லப்பன் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு 7.45 மணிக்கு, சலவை தொழிலாளிக்கு விடப்பட்ட, வீட்டின் ஒரு பகுதியில், மின் கசிவு ஏற்பட்டு, தீப்பற்றியது.
பழங்கால பர்மா தேக்கினால், கட்டிய வீடாக இருந்ததால், மரங்கள் முற்றிலும், எரிந்து சாம்பலாகின.

சலவை தொழிலாளியிடம், அப்பகுதியினர் வழங்கிய, பட்டு சேலைகள், துணிகள் எரிந்து சாம்பலாகின. வீட்டில் இருந்த கிரைண்டர், பீரோ, கட்டில்,வீட்டு பத்திரம், பில்லப்பன் மகனின் பள்ளி சான்று, பாஸ்போர்ட் போன்றவை எரிந்தது. இதன் சேதமதிப்பு, ரூ.4 லட்சம் வரை இருக்கும் என, தெரிவிக்கின்றனர்.