Nagaratharonline.com
 
வலையபட்டி மலையாண்டி கோயிலில் கந்தசஷ்டி விழா  Nov 9, 13
 
வலையபட்டி மலையாண்டி கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 3-ம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடைபெற்றது. விழாவில் வலையபட்டி, பொன்னமராவதி உள்ளிட்ட சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.