Nagaratharonline.com
 
காரைக்குடியில்குண்டும், குழியுமாக உள்ள சாலையால் பொதுமக்கள் அவதி  Nov 7, 13
 
காரைக்குடியில் முக்கிய வழித்தடமான தேவகோட்டை செல்லும் கேஎம்சி சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

காரைக்குடி கீழஊரணி பகுதியிலிருந்து கேஎம்சி சாலையில், செஞ்சை பள்ளிவாசல் வழியாக தேவகோட்டை, ராமநாதபுரம் செல்லும் பேருந்துகளில் பயணம் செய்வோர், கார், வேன் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை ஓட்டுவோர் என பலதரப்பினரும் குண்டும், குழியுமாக உள்ள இந்த சாலையில் செல்வதால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் சாலையின் அருகேயுள்ள கழிவு நீர் கால்வாய் உடைந்து சாலையில் மழைநீருடன் கலப்பதால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இச்சாலையை உடனடியாக சீரமைக்கவேண்டும் என்ற பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.