Nagaratharonline.com
 
பாகனேரியில் வீடுகளில் கொள்ளை  Nov 6, 13
 
திருப்பூரில் வசிக்கும் சொக்கலிங்கம் வீட்டில் தாலிசெயின்,வளையல்,பிரேஸ்லட் உள்பட 14 பவுன் நகை,இரண்டு பட்டு புடவைகள் திருடப்பட்டுள்ளது.

சென்னையில் வசிக்கும் செந்தில் என்பவர் நேற்று காலை அவரது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வெளியே வீடு பூட்டப்பட்டிருந்தது.
ஆனால் அவர் நான் போட்ட பூட்டு இல்லை என்று கூறியதால் போலீசார் முன்னிலையில் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே சென்று பார்த்த போது அனைத்து கதவுகளும் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டிருந்தன. பூஜை அறையில் இருந்த 30ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் ,20 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

மதகுபட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தொடர்ந்து திருடப்பட்ட அனைத்து வீடுகளிலும் சந்தேகம் வராத அளவிற்கு புதிய பூட்டுக்கள் மூலம் வீட்டை பூட்டியுள்ளனர்.