Nagaratharonline.com
 
தேவகோட்டை வாரச்சந்தையில் நெரிசல்  Nov 3, 13
 
தேவகோட்டையில் வாரத்தில் ஞாயிறு அன்று காய்கறி, மீன் சந்தை நடைபெறும். சந்தைக்கு சரக்கு ஏற்றி வரும் லாரிகள் சரக்குகளை இறக்கவிட்டு, ரோட்டின் இருபுறமும் நிறுத்தி விட்டு, மாலை 6 மணிக்கு மேல் எடுப்பதால், போக்குவரத்துநெரிசல் ஏற்படுகிறது.

எனவே, சந்தையன்று ஏற்படும் நெரிசலை தவிர்க்க, காய்கறிகளை கொண்டு வரும் சரக்கு வாகனங்கள், சந்தைக்குள் சரக்குகளை இறக்கிவிட்டு, பின் அந்த வாகனங்களை கருதாவூரணியில் நிறுத்த வேண்டும்.

இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தலாம். எனவே, போக்குவரத்து போலீஸ் நிர்வாகம் வாரச்சந்தையன்று நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.