Nagaratharonline.com
 
திருச்சி - ஈரோடு பாசஞ்சரை காரைக்குடிக்கு நீட்டிக்க கோரிக்கை  Oct 28, 13
 
திருச்சியிலிருந்து ஈரோடு வரை செல்லும் பாசஞ்சர் ரயிலை, காரைக்குடி வரை நீட்டிக்க வேண்டும், என ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ரயில் பயணிகள் சங்க தலைவர் அரங்கசாமி தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
திருச்சியிலிருந்து ஈரோடுக்கு காலை 6.45, மாலை 4.10 மணிக்கு பாசஞ்சர் ரயில் செல்கிறது.

இதை காரைக்குடி வரை நீட்டித்தால், திருமயம், புதுக்கோட்டை, கீரனூரில் உள்ள சிறுவியாபாரிகள், ஏழை நடுத்தர மக்கள், ஈரோட்டின் ஜவுளி வகைகளை வாங்கி விற்க ஏதுவாக இருக்கும்.
திருச்சியில், இந்த ரயில் நான்கு மணிநேரம்
இடைவெளியாக நிறுத்தப்படுவதால், அந்த நேரத்தை காரைக்குடிக்கு நீடித்து இயக்க வேணடும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.