Nagaratharonline.com
 
பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் கொலுசு திருடிய சகோதரிகள் கைது  Oct 27, 13
 
மகிபாலன்பட்டியைச் சேர்ந்தவர் கே. சித்ரா (28). இவர் தனது கொலுசை மாற்றுவதற்காக பொன்னமராவதிக்கு பேருந்தில் வந்தார். பேருந்து நிலையத்தில் இறங்கும்பொழுது ஒரு பெண் அவரது பையில் வைத்திருந்த கொலுசை எடுத்து பக்கத்திலிருந்தவரிடம் கொடுத்தாராம்.

இதைக்கண்ட சித்ரா அருகில் இருந்தவர்களிடம் கூறியவுடன், அவர்கள் இரு பெண்களையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர்களை விசாரித்தபோது, பரமக்குடியைச் சேர்ந்த எம். கஸ்தூரி, எம். நாகவள்ளி என்பதும், இருவரும் சகோதரிகள் என்பது தெரியவந்தது.

காவல் உதவி ஆய்வாளர் செந்தமிழன் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தார்.