Nagaratharonline.com
 
குன்றக்குடியில் கந்த சஷ்டி திருவிழா நவ. 3இல் துவக்கம்  Oct 27, 13
 
அருள்மிகு ஆறுமுகச்செவ்வேள் பெருமான் எழுந்தருளியிருக்கும் குன்றக்குடி திருக்கோயிலில் வரும் நவம்பர் 3 முதல் 9ஆம் தேதி வரை கந்தர் சஷ்டி திருவிழா நடைபெறவிருக்கிறது.

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்திற்குச்சொந்தமான இக்கோயிலில், 03/11/2013 விழா தொடங்குகிறது. அன்று மாலையில் சுவாமி ஆறுமுகச் செவ்வேள் எழுந்தருளலும், சூரபன்மன் எதிரெழுந்து வரல் நிகழ்ச்சி நடைபெறும். அதைத் தொடர்ந்து ஒவ்வொருநாளும் தாரகன், சிங்கமுகன் போன்ற பல்வேறு அவதாரங்களில் சுவாமியை சூரபன்பன் எதிர்கொள்ளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

குன்றக்குடி ஆதீனத் தலைவர் பொன்னம்பல அடிகளார் முன்னிலையில் நவம்பர் 8ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.