Nagaratharonline.com
 
காரைக்குடியில் வழிப்பறி திருடர்கள் அட்டகாசம் தொடர்கிறது !  Oct 22, 13
 
06/10/2013 தேதி, செக்காலை 2-வது வீதியை சேர்ந்த, அழகப்பா பல்கலை பேராசிரியர் மெய்யப்பன், வீட்டில் நான்கு பவுன் வளையல் திருட்டு, 12/10/2013 தேதி, பள்ளத்தூர் நடு வீதியை சேர்ந்த பழனியப்பன், என்பவரது வீட்டில் 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு, அக்.17ம் தேதி, புதுயவல் ஏ.மு.வீதியை சேர்ந்தவர் சின்னையா மனைவி சுமதி,30, என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, ஐந்து பவுன் வழிப்பறி, காரைக்குடி கழனிவாசல் ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்த சுமதி,38 என்பவரிடம், கத்தியை காட்டி மிரட்டி, நான்கு பவுன் செயின் பறிப்பு நடந்தது.
நேற்றும் ஒரு திருட்டு நடந்துள்ளது, பொதுமக்களை பீதியடைய செய்துள்ளது. காரைக்குடி பர்மா காலனியை சேர்ந்தவர் சொக்கலிங்கம்,45. இவர்களுக்கு சொந்தமான பொது வீடு, மூ.வி., வீதியில் உள்ளது.
அனைவரும் பர்மா காலனியில் இருப்பதால், இந்த வீடு பூட்டி கிடந்துள்ளது.
நேற்று மதியம் சந்தேகப்படும்படியாக, இப்பகுதியில், மூன்று இளைஞர்கள் நின்றனர். வீட்டினுள் சத்தம் கேட்டுள்ளது. பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள்,சொக்கலிங்கத்திடம் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அவர் வந்து வீட்டை திறந்து பார்த்த போது, வீட்டின் நடு முற்றத்தில் உள்ள மேற்புற கம்பியை பெயர்த்து, அதன் வழியே உள்ளே புகுந்த திருடர்கள், பீரோவை உடைத்து ஐந்தரை பவுன் நகை, இரண்டரை கிலோ வெள்ளி கட்டிகளை திருடி சென்றுள்ளது தெரியவந்தது. குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நந்தகுமார் விசாரணை மேற்கொண்டார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, காரைக்குடிக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும், என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.