Nagaratharonline.com
 
நெற்குப்பை அரசு மருத்துவமனை உதவியாளரை மிரட்டி, நகை பறிப்பு  Oct 21, 13
 
காரைக்குடி நவரத்தினா நகரை சேர்ந்தவர் ரத்தினம்,48. இவர், நெற்குப்பை அரசு மருத்துவமனை உதவியாளர். நேற்று முன்தினம் வேலை முடித்து, வீட்டிற்கு திரும்பினார். இவரை பின் தொடர்ந்து, டூவீலரில் வந்த மர்ம நபர்கள் இருவர், கொலை செய்துவிடுவதாக மிரட்டி, கழுத்தில் இருந்த 2.5 பவுன் செயினை வழிப்பறி செய்தனர். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் விசாரிக்கிறார்.