Nagaratharonline.com
 
வலையபட்டியில் மாடு முட்டி, முதியவர் சாவு  Oct 21, 13
 
வலையபட்டியில் ஞாயிற்றுக்கிழமை மாடு முட்டியதில் முதியவர் உயிரிழந்தார்.

பொன்னமராவதி வலையபட்டி 5ம் வீதியை சேர்ந்தவர் ஆர்எம். சிதம்பரம் (76). இவர் ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து அடைக்கன் ஊரணி சாலையில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் திரிந்த மாடு அவரை முட்டி தள்ளியது.

இதில் சம்பவ இடத்திலேயே சிதம்பரம் உயிரிழந்தார்.

இதுகுறித்து அந்த தெருவில் குடியிருப்போர் கூறுகையில், இப்பகுதியில் திரியும் மாடுகள் இதற்கு முன்பும் ஒரு சிலரை முட்டியுள்ளது.
எனவே தெருவில் திரியும் மாடுகளை அப்புறப்படுத்தி உயிர்பலியை தடுக்கவேண்டும் என்றனர்.