Nagaratharonline.com
 
லெட்சுமிபுரத்தில்,நகரத்தார் சிவன்கோயில் கதவை உடைத்து ஐம்பொன் சிலை திருட்டு  Oct 15, 13
 
பள்ளத்தூர் அருகே லெட்சுமிபுரத்தில்,பழமை வாய்ந்த நகரத்தார் சிவன்கோயில் உள்ளது.நேற்று முன்தினம் இரவு, நவராத்திரியையொட்டி, அம்புவிடும் நிகழ்ச்சி நடந்துள்ளது. இரவு 10.30 மணிக்கு, கோயில் நிர்வாகத்தினர் கோயிலை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.

நேற்று காலை 8 மணிக்கு, கோயில் பூசாரி ராஜாமணி சன்னதி முன்புற கிரில் கேட்டு கதவை திறக்க வந்தபோது, கோயிலின் இடது புறத்தில், உள்ள கிரில்கேட் பூட்டு உடைக்கப்பட்டு, மரக்
கதவு பெயர்க்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது, பழமை வாய்ந்த 30 கிலோ எடையிலான, ஒன்றரை அடி உயரம் ஐம்பொன் பிள்ளையார் சிலை, சிவலிங்கம் பிரதிபலிக்கும், பித்தளை பேழையிலான 100 கிலோ எடையுள்ள கண்ணாடி, சன்னதியில்,சிவலிங்கத்தின் மீது இருந்த 20 கிலோ எடையுள்ள திருவாச்சி பெயர்க்கப்பட்டு, திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
கோயில் டிரஸ்டி மெய்யப்பன், செட்டிநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

SP.அஸ்வின் கோட்னீஸ், DSP. பொன்கார்த்திக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். திருடர்கள் கைரேகை தெரியாமல் இருப்பதற்காக, கோயில் முழுவதும்
தண்ணீரை ஊற்றி விட்டு சென்றுள்ளனர்.