Nagaratharonline.com
 
பாகனேரியில் 18 பவுன் நகை, பணம் திருட்டு  Oct 14, 13
 
பாகனேரி புது நகரைச் சேர்ந்தவர் நடராஜன் செட்டியார்.இவரது மனைவி பர்வதம் ஆச்சி தனியாக வசித்து வந்தார்.இவரது மகள் திண்டுக்கல்லில் வசிக்கிறார்.பர்வதம் 25 நாட்களுக்கு முன்னர் மகள் வீட்டிற்கு சென்றார்.

நேற்று மாலை வீடு திரும்பியபோது வீட்டிலுள்ள கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டார்.வீட்டில் இருந்த 18 பவுன் நகை,ஒரு லட்சம் மதிப்புள்ள வைரத்தோடு,வைர மோதிரம் ரூ.10 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பர்வதம்ஆச்சி மகள் மீனாள் மதகுபட்டிபோலீசிலபுகார்அளித்தார்.இன்ஸ்பெக்டர்கண்ணன்,
எஸ்.ஐ.பாண்டியன் விசாரணை செய்து வருகின்றனர்.