Nagaratharonline.com
 
பள்ளத்தூரில் பூட்டை உடைத்து 2 கிலோ வெள்ளி திருட்டு  Oct 14, 13
 
பள்ளத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து, 2 கிலோ வெள்ளி பொருட்களை, மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

பள்ளத்தூரைச் சேர்ந்தவர் பழனியப்பன். மலேசியாவில் வசிக்கிறார். பள்ளத்தூர் வீட்டின் மாடியை வாடகைக்கு விட்டுள்ளார். கீழ் தளத்தை, பூட்டி வைத்திருந்துள்ளார். கடந்த 12ம் தேதி இரவு, மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, 2 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்றனர். பள்ளத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.