Nagaratharonline.com
 
நற்சாந்துபட்டி கோயிலில் நாகபஞ்சமி விழா  Oct 9, 13
 
நற்சாந்துப்பட்டியிலுள்ள நாகதேவி நல்லதங்காள் கோயிலில் நாகபஞ்சமி விழா மற்றும் சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றது.

குழந்தை பேறு, கர்ம வினைகள், கடும் நோய்கள், திருமணத் தடைகள் விலகவும் நாக பஞ்சமி நாளில் ஆண்டுதோறும் யாகம் நடைபெறும். அதன்படி, புதன்கிழமை நாகதேவி நல்லதங்காளின் வெள்ளி திருமேனி, கோட்டை பெரியக்கருப்பர், சின்னக்கருப்பர் உள்ளிட்ட தெய்வங்களின் ஐம்பொன் திருமேனிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

பக்தர்கள் முளைப்பாரி, பால்குடம், அக்னிபால் குடம் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து அம்மன் ஊஞ்சல் உத்சவமும் திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.