Nagaratharonline.com
 
NEWS REPORT: தமிழண்ணலுக்கு தொல்காப்பியர் விருது  Oct 9, 13
 
 
2010-11-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருதுகளை தமிழண்ணலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அறிஞர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை, பொன்னாடை ஆகியவற்றுடன் 2010-11-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது பெறுவதற்காக பேராசிரியர் இராம. தமிழண்ணல் பெரிய கருப்பன் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். அதைப் பார்த்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இருக்கையில் இருந்து வந்து அவருக்கு விருதை வழங்கினார்.

தமிழண்ணல் அவர்கள் நெற்குப்பையில் பிறந்தவர். இளையாற்றங்குடி கழனிவாசல் பிரிவு கோவிலை சார்ந்தவர் .

நகரத்தார் கேட்வே .காம் தமிழண்ணல் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது !