Nagaratharonline.com
 
ஏரியூரில் பூட்டிய வீட்டில் வெள்ளிக்குடம் திருட்டு  Oct 9, 13
 
ஏரியூரில் பூட்டிய வீட்டில் வெள்ளிக்குடம் திருடப்பட்டுள்ளது.ஏரியூர்,
காளீஸ்வரப்பட்டிணத்தில் சிவனடியான் மகன் குமரப்பன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. குமரப்பன், தஞ்சாவூரில் இன்ஜினியராக உள்ளார்.ஏரியூரில் உள்ள வீடு பூட்டி உள்ளது.

நேற்று இரவு, ஏரியூர் வீட்டின், பின்புற கிரில் கதவை திறந்து, மர்மநபர்கள் வீட்டினுள்சென்றுள்ளனர்.பூஜையறையில் இருந்த அரைகிலோ வெள்ளி குடத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.குமரப்பன், திருக்கோஷ்டியூர் போலீசில் புகார் செய்தார்.