Nagaratharonline.com
 
கோவிலூரில் கருத்தரங்கம்  Oct 8, 13
 
கோவிலூரில் கோவிலூர் மடாலயத்தின் தர்ம உலகப்பல்கலைக்கழக அறநிலையும், காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகமும் இணைந்து 144-வது காந்தி ஜயந்தி விழா கருத்தரங்கை நடத்தின.

காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.எம். ராமசாமி தலைமை வகித்தார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் மெய்யப்பன் வரவேற்றார். கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப சுவாமிகள் தனது ஆசியுரையில், இம்மடாலயத்தில் பசி என்று வருவோருக்கு இல்லை என்று சொல்லாமல் உணவு வழங்குவது பல்லாண்டு களாக தொடர்கிறது. மேலும் சாதி, சமய பேதமில்லாமல் இம்மடாலயத்தின் நிறுவ னங்களில் ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர் என்றார்.

முடிவில் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சே. குமரப்பன் நன்றி கூறினார்.