Nagaratharonline.com
 
.கோவில் கும்பாபிஷேக சிறப்பு மலர் வெளியீடு  Jan 9, 10
 
புதுக்கோட்டையில் இன்று(10ம் தேதி) துவார் வள்ளிநாயக சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்புமலர் வெளியீட்டு விழா நடக்கிறது. வர்த்தக சங்க சில்வர்ஹாலில் நடைபெறவுள்ள விழாவுக்கு மலர் வெளியீட்டு விழாக்குழு செயலர் வள்ளியப்பன் தலைமை வகிக்கிறார். தலைவர் ஜோதிலிங்கம் வரவேற்கிறார். மாஜி மத்திய அமைச்சர் ரகுபதி விழா மலரை வெளியிடுகிறார். இதன் முதல் பிரதியை கும்பாபிஷேக விழாக்குழுத் தலைவர் பழனியப்ப செட்டியார் பெற்றுக்கொள்கிறார். தொழிலதிபர்கள் சிதம்பரம் செட்டியார், அடைக்கப்ப செட்டியார், ராமநாதன் செட்டியார் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர்.


source : Dinamalar