Nagaratharonline.com
 
NEWS REPORT: நெற்குப்பை முரு. பழ இல்லத்தில் பட்டாபிஷேகம்  Oct 2, 13
 
நெற்குப்பையில் இடிதாங்கி வீடு என்று பெயர் பெற்ற முரு. பழ இல்லத்தில் 21/09/2013 அன்று, ராமாயணம் படிக்கும் நிகழ்ச்சியான "ஏடு எடுத்தல்" முதல் நாள் கணபதி ஹோமத்துடன் சிறப்பாக துவங்கியது.

23/09/2013 அன்று, நகரத்தார்கள் பலர், சீர்கொண்டுவர சீதா கல்யாணம் நடந்தது . 27/09/2013 அன்று, பரத்துவாசர் விருந்து, அனைவருக்கும் பரிமாறப்பட்டது .

28/09/2013 அன்று இரவு, திரளான நகரத்தார் பெருமக்களும் பொதுமக்களும் பூமாரி தூவ, பட்டாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. நிறைவாக முரு. பழ. பங்காளிகளுக்கும் முரு.பழ வீட்டில் பிறந்த பெண்மக்களுக்கும் காளாஞ்சி மற்றும் பிரசாதங்கள் அடங்கிய பையும் வழங்கப்பட்டது.

ஏடு எடுத்தல் முதல் பட்டாபிஷேகம் வரை நடைபெற்ற நிகழ்ச்சியினை, நடப்பு காரியக்காரர் திரு. முரு.சொ. சேதுராமன் செட்டியார் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்