Nagaratharonline.com
 
கொப்பனாபட்டி அருகே சாலை விபத்தில் கோவில் அர்ச்சகர் சாவு  Oct 2, 13
 
திருப்பத்தூரை சேர்ந்தவர் பி. வைரவமூர்த்தி(25). கோவில் அர்ச்சகரான இவர் 30ம்தேதி திங்கள்கிழமை பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார். கொப்பனாபட்டி அருகே சென்ற போது எதிரே வந்த இருசக்கரவாகனம் நேருக்கு நேர் மோதியது.

இதில் வைரவமூர்த்தி பலத்த காயமடைந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். எதிரே இருசக்கரவாகனத்தில் வந்த கொப்பனாபட்டி அ. முகமது இக்பால் பலத்த காயமடைந்து பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பொன்னமராவதி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.