Nagaratharonline.com
 
எம்.ஏ.சிதம்பரம் அறக்கட்டளை விருதுகள் அறிவிப்பு  Oct 1, 13
 
தமிழ் இலக்கியம், நுண்கலை, தொழில் துறை ஆகியவற்றில் சிறந்து விளங்குவோருக்கு சென்னை எம்.ஏ.சிதம்பரம் அறக்கட்டளையின் சார்பில் 2013-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருது தலா ரூ.1 லட்சம் மற்றும் பாராட்டுச் சான்றிதழைக் கொண்டது.

விருது பெறுவோர் விவரம்:

டாக்டர் ஆர்.செல்வகணபதி- ராஜா அண்ணாமலை செட்டியார் விருது (தமிழ் இலக்கியத் துறை)

திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்- எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் விருது (நுண்கலைத் துறை )

"பீப்புள் கேப்பிடல்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்தீப் ரெட்டி- ஏ.சி.முத்தையா விருது (முதல் தலைமுறை தொழில்முனைவோர்)

டாக்டர் எம்.ஏ.சிதம்பரத்தின் 95-ஆம் பிறந்த நாளை முன்னிட்டு வரும் அக்டோபர் 12-ஆம் தேதி பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படும்.