Nagaratharonline.com
 
தொகுதி மேம்பாட்டு நிதி வருமா? மதகுபட்டி மக்கள் எதிர்பார்ப்பு  Sep 25, 13
 
மதகுபட்டி ஊராட்சிக்கு சிவகங்கை எம்.பியும்,மத்திய அமைச்சருமான சிதம்பரம் கடந்த 20 வருடங்களாக எந்த பணிக்கும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்ற புகார் உள்ளது. 20 வருடங்களுக்கு முன்னர் ஒரு சமுதாய கூடத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்தார். பின்னர், இங்குள்ளவர்கள் பல தடவை நிதி பெற முயற்சி செய்தும் எந்த திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இங்குள்ள மக்கள் அடிப்படையான கல்வி, மருத்துவ வசதி கிடைக்காமல் அலையும் நிலையில் உள்ளனர். மத்திய அமைச்சராக உள்ள சிதம்பரம் மதகுபட்டி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.