Nagaratharonline.com
 
துலாவூர் நகரத்தார் பெண்கள் குருபீடத்தில் குருபூஜை  Sep 22, 13
 
காரைக்குடி அருகே துலாவூர் நகரத்தார் பெண்கள் குருபீடத்தில் குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆயிரம் ஆண்டுகள் பழமையுடையதும், சைவ ஆதீன மடங்கள் பதினெட்டில் ஒன்றானதுமான துலாவூர் ஆதீனத்தில் ஆதி குருவாகிய ஸ்ரீ நிரம்ப அழகிய தேசிகரின் மகா குருபூஜை நடைபெற்றது.

விழாவில், தேனி பொறியியல் கல்லூரி நிறுவனர் உடையப்பச்செட்டியார் தலைமை யில் கவிஞர் அரு. சோமசுந்தரன் வரவேற்று அறிமுக உரையாற்றினார். கடியாபட்டி தெய்வராயன் செட்டியாருக்கு அறமனச்செம்மல் எனும் பட்டத்தை துலாவூர் ஆதீனம் ஞானப்பிரகாச தேசிகர் வழங்கினார்.

விழாவில், நகரத்தார் ஆண்கள் குருபீடம் பாதரக்குடி ஆதீனம் ஸ்ரீ ரவீந்திரசுவாமிகள், தேவகோட்டை ஜமீன்தார் சோம. நாராயணன் செட்டியார், ராமநாதன், அப்பச்சி சபாபதி, ஆண்டியப்பன் ஆகியோர் பேசினர். முடிவில் தெய்வராயன் செட்டியார் நன்றி கூறினார்.