Nagaratharonline.com
 
அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் ஏராளமானோர் தரிசனம்  Sep 21, 13
 
அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையன்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழக இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள இக்கோயில் தென் திருப்பதி என்று பக்தர்களால் போற்றப்பட்டு வருகிறது. இங்கு புரட்டாசி முதல் சனிக்கிழமையை யொட்டி, அதிகாலையில் கோயில் நடைதிறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கோயில் மண்டபத்தில் அலர்மேலுமங்கை தாயாருடன் திருவேங்கடமுடை யான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.