Nagaratharonline.com
 
தேவகோட்டை வாரச்சந்தைக்கு வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்  Sep 20, 13
 
தேவகோட்டையில் போக்குவரத்து நிறைந்த இடத்தில், வாரச்சந்தை செயல்படுகிறது. இங்கு, சந்தைக்கு காய்கறி கொண்டுவரும் லாரிகள், காய்கறிகளை இறக்கிவிட்டு, வாகனங்களை மெயின்ரோட்டில் நிறுத்துகின்றனர். அவற்றை மீண்டும், மாலை 6 மணிக்கு எடுப்பதால், அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால், சந்தைக்கு, தேவகோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் காய்கறி வாங்க, குவிகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போலீஸ், நகராட்சியில் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை என, தேவகோட்டை நகர் மக்கள் புலம்பி வருகின்றனர்.

சந்தையில் சரக்குகளை இறக்கிவிட்டு, கருதாவூரணியை சுற்றிலும் நிறுத்தினால், நெரிசல் ஏற்படாது. இதை, போக்கவரத்து போலீசார் செயல்படுத்த வேண்டும்.