Nagaratharonline.com
 
பொன்னமராவதியில் நகை பறிப்பு  Sep 4, 13
 
பொன்னமராவதியில் செவ்வாய்க்கிழமை இருவேறு சம்பவங்களில் பேருந்து பயணிகளிடம் ரூ. 1.12 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்டன.

பொன்னமராவதி அருகேயுள்ள திருக்களம்பூரைச் சேர்ந்த எஸ். வைத்தியநாதன் தனது மனைவியுடன் பேருந்தில் சென்ற போது நாலரைப் பவுன் நகை திருடுபோனது.

அதுபோல காரைக்குடி அருகே உள்ள புதுக்கண்டனூர் பகுதியை சார்ந்த வி. முத்து என்பவர் பொன்னமராவதிக்கு பேருந்தில் வந்தபோது கூடையில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்க நகை திருடப்பட்டன. இது குறித்து பொன்னமராவதி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொன்னமராவதியில் நகைப்பறிப்பு: இதேபோல செவ்வாய்க்கிழமை பொன்னமராவதி பட்டமரத்தான் நகரை சேர்ந்த ஆர். கலைச்செல்வி சந்தைக்கு சென்று விட்டு திரும்பிய பொழுது வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவர் கழுத்தில் இருந்த 6 பவுன் நகையை பறித்து சென்றனர். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.