Nagaratharonline.com
 
மெ.மெ.வீதி வளைவில் கால்வாயில் இறங்கிய அரசு பஸ்: தப்பிய பயணிகள்  Sep 2, 13
 
காரைக்குடியிலிருந்து தேவகோட்டைக்கு, தடம் எண் 363 என்ற எண் கொண்ட பஸ், நேற்று பிற்பகல் 3.45 மணிக்கு சென்றது.30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். டிரைவர் லூர்து பஸ்சை ஓட்டி சென்றார். மெ.மெ.வீதி அருகே உள்ள வளைவில் திரும்பும்போது,எதிரே சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர்,எதிரே கார் வந்ததை கவனிக்காமல், பஸ்சிற்குள் தவறி விழ முற்பட்டதை தொடர்ந்து, டிரைவர் பஸ்சை, இடது புறம் திருப்பியுள்ளார். அங்கிருந்த கால்வாயில் பஸ் சாய்ந்தது. பயணிகள் பின்வாசல் வழியே இறக்கப்பட்டனர்.