Nagaratharonline.com
 
பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்  Aug 29, 13
 
பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை தடையை மீறி பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டிற்கு பேரூராட்சி நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பேரூராட்சி தலைவர் ஆர்எம். ராஜா, செயல் அலுவலர் வ. சுலைமான்சேட் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் பேரூராட்சி பணியாளர்கள் வணிக நிறுவனங்களில் திடீர் ஆய்வு செய்து பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கப்புகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.