Nagaratharonline.com
 
புட்டுத் திருவிழாவுக்கு சென்றுவிட்டு திருப்பரங்குன்றம் வந்தடைந்த சுப்பிரமணிய சுவாமி  Aug 23, 13
 
புட்டுத் திருவிழாவுக்காக மதுரை சென்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, பூப்பல்லக்கில் வியாழக்கிழமை திருப்பரங்குன்றம் வந்தடைந்தார். சுவாமியை பக்தர்கள் வழியெங்கும் திருக்கண் அமைத்து வழிபட்டனர்.

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கடந்த 18 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற புட்டுத் திருவிழாவில் பாண்டிய மன்னனாக எழுந்தருளினார். இதற்காக, கடந்த 17 ஆம் தேதி திருப்பரங்குன்றத்திலிருந்து புறப்பாடாகி, மதுரை சென்றார்.

அங்கு, ஆவணி மூல வீதிகளில் தினமும் எழுந்தருளிய சுவாமி, தெய்வானையுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை மதுரையிலிருந்து பூப்பல்லக்கில் தெய்வானையுடன் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி, இரவு 9 மணியளவில் திருப்பரங்குன்றம் வந்தடைந்தார். முன்னதாக, சுவாமிக்கு பக்தர்கள் வழிநெடுகிலும் 100-க்கும் மேற்பட்ட திருக்கண் அமைத்து தரிசனம் செய்தனர்.