Nagaratharonline.com
 
பாகனேரியில் நர்ஸ்கள் இல்லாததால் இரவில் பூட்டப்படும் அரசு மருத்துவமனை  Aug 6, 13
 
பாகனேரி தாய்,சேய் நல மருத்துவமனையில் நர்ஸ்கள் இல்லாததால் இரவில் பூட்டப்படும் நிலை உள்ளது. .
இங்கு பகலில் ஒரு டாக்டரும், இரவில் நர்ஸ்களும் சிகிச்சை அளித்து வந்தனர்.கடந்த மாதம் நடைபெற்ற நர்ஸ் கவுன்சிலிங்கில் 3 நர்ஸ்கள் பணிமாறி சென்றதால் பகலிலும் சரியான சிகிச்சையளிக்க முடியாமலும் இரவு நேரத்தில் நர்ஸ்கள் இல்லாததால் மருத்துவமனை மூடப்பட்டது. பகலில் சிகிச்சை பெறுபவர்களை மாலையில் வீட்டு அனுப்பி விட்டு மறுநாள் காலை அனுமதிக்கும் அவலம் காணப்படுகிறது.
கடந்த ஒரு மாதமாக இந்த நிலை காணப்பட்டாலும் மருத்துவத்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.இப்பகுதி மக்கள் இரவு நேர சிகிச்சைக்காக அலைய வேண்டியுள்ளது.