Nagaratharonline.com
 
வயிரவன்பட்டி வயிரவர் மகாஉற்சவம் துவக்கம்  Aug 2, 13
 
வயிரவன்பட்டி வளரொளி நாதர் வடிவுடையம்மை கோயிலில்,வயிரவசுவாமி மகாஉற்சவம் நேற்று துவங்கியது.இக்கோயிலில் ஆடி மாதம், வயிரவருக்கு உற்சவம் 10 நாட்கள் நடைபெறும்.நேற்று அதிகாலை 5.45 மணிக்கு கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜைகள் துவங்கின.வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் முடிந்து,பகல் 11 மணிக்கு வயிரவருக்குக் காப்புக்கட்டப்பட்டு, மகா உற்சவம் துவங்கியது.

இரவில் சிம்ம வாகனத்தில் வயிரவர் திருவீதி வலம் வந்தார். தினசரி இரவு,சுவாமி திருவீதி உலா நடைபெறும்.ஆக.,9ல் மாலையில் தேரோட்டமும்,ஆக.,10ல் பூப்பல்லக்கில் வீதி உலாவும்,ஆக.,11ல் காலையில் திருக்கல்யாணமும் இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெறும். ஏற்பாட்டினை, வயிரவன் கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார் செய்துள்ளனர்.