Nagaratharonline.com
 
NEWS REPORT: திருச்சி என்.ஐ.டி -யில் ஐடிஐ அப்ரென்டிஸ் பயிற்சி  Jul 29, 13
 
உலகப் புகழ் வாய்ந்து திகழ்கின்ற இந்தியாவின் புகழ் பெற்ற நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி எனப்படும் என்.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனத்தின் தமிழகத்தின் திருச்சி கிளையில் ஐ.டி.ஐ (எலக்ட்ரீசியன்) முடித்தவர்களுக்கு அப்ரென்டிஸ் அடிப்படையில் பயிற்சி வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கல்வித்தகுதிகள்: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

பயிற்சி காலம்: ஒரு வருடம்.

பயிற்சி தொடங்கும் மாதம்: பயிற்சி தேர்வு செய்யப்படுபவர்கள் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் பயிற்சி அளிக்கப்படும்.

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.5000 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களைப்பற்றிய (Bio-data) முழுமையான விவரங்களுடன் அதாவது தொடர்பு முகவரி, இ-மொயில் முகவரி, தொடர்புகொள்ள வேண்டிய தொலைப்பேசி அல்லது அலைபேசி எண்ணுடன் கீழ்காணும் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும்.

The Registrar,
Kind Attention: HOD / EEE
National Institute of Technology,
Tiruchirappalli - 620 015,Tamil Nadu, India.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nitt.edu என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

விண்ணப்பங்கள் சென்று சேறுவதற்கான கடைசி தேதி: 05.08.2013

குறிப்பு: சர்வதேச அளவில் நிறுவனத்தின் பெயர் இருப்பதால் இங்கு அப்ரென்டிஸ் பயிற்சி பெறுவது எதிர்கால பணி வாழ்க்கைக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று கருதப்படுவதால் வாய்ப்பை வசப்படுத்த்திக்கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.