Nagaratharonline.com
 
NEWS REPORT: சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு புதிய இணைப்பு ரயில்  Jul 29, 13
 
சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு புதன்கிழமைமுதல் (ஜூலை 31) புதிய இணைப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ரயில் எண் 16129: சென்னை எழும்பூரில் இருந்து தினசரி காலை 7.40 மணிக்குப் புறப்பட்டு தூத்துக்குடிக்கு இரவு 8.35 மணிக்கு சென்றடையும்.

ரயில் எண் 16130: தூத்துக்குடியில் இருந்து காலை 7.35 மணிக்குப் புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு இரவு 9.15 மணிக்கு வந்தடையும்.

இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸில் இணைத்து இயக்கப்படும். இந்த ரயிலில் 6 முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளும், ஒரு முன்பதிவு செய்யப்படாத பெட்டியும் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.