Nagaratharonline.com
 
கல்லல் : அகற்றிய வேகத்தடை மீண்டும் அமைக்க கோரிக்கை  Jul 28, 13
 
கல்லல் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி கல்லல்-காரைக்குடி மெயின் ரோட்டில் உள்ளது. 250க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். தொடக்கப்பள்ளி கட்டிடம் எதிரே 2 இடத்தில் வேகத்தடை இருந்தது. 6 மாதத்திற்கு முன்,வேகத்தடைகளை அகற்றினர்.

காரைக்குடி, காளையார்கோவில், பரமக்குடி, மார்க்கமாக செல்லும் இந்த ரோட்டில் அதிகளவில் வாகனப் போக்குவரத்து உள்ளன. ஏற்கனவே இருந்த வேகத்தடையை அகற்றியதில் முதல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர் அச்சப்படுகின்றனர். இந்த ரோட்டில் மணல்,கிராவல் ஏற்றி செல்லும் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால் விபத்து அபாயமும் நிலவுகிறது. ஏற்கனவே வேகத்தடை இருந்த அதே இடத்தில் மீண்டும் வேகத்தடை அமைத்து, அவ்விடத்தில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.