Nagaratharonline.com
 
தேவகோட்டையில் மெய்யப்பன் செட்டியாரை கொன்று ரூ.50 லட்சம் நகை-பணம் கொள்ளை  Jul 28, 13
 
தேவகோட்டை மாந்தோப்பு தெருவை சேர்ந்தவர் அண்ணா மெய்யப்பன் செட்டியார் (வயது59), இவர் மனைவி லட்சுமி ஆச்சியுடன் வசித்து வந்தார். மகன் அண்ணாமலை சென்னையிலும், மற்றொரு மகன் மீனாட்சி சுந்தரம் துபாயிலும் வேலைபார்த்து வருகின்றனர்.

தேவக்கோட்டையில் நீண்ட காலமாக அண்ணா மெய்யப்பன் செட்டியார் வட்டித்தொழில் செய்து வந்தார். நேற்று இவர் வீட்டில் இல்லாத நேரத்தில் 4 வாலிபர்கள் அங்கு வந்துள்ளனர். அவர்கள் லட்சுமி ஆச்சியிடம் கேபிள் வேலையை செய்ய வந்ததாக கூறினர். சிறிது நேரம் வேலைபார்த்த அவர்கள் சாப்பிட்டு விட்டு வருவதாக கூறி சென்றனர். 2.30 மணி அளவில் மீண்டும் வீட்டிற்கு வந்தனர். அப்போது அண்ணா மெய்யப்பன் செட்டியாரும் வீட்டில் இருந்துள்ளார். 4 பேரை பார்த்ததும் சந்தேகம் கொண்ட அவர் மனைவியிடம் கதவை திறக்காதே என கூறினர்.

ஆனால் அதற்குள் வீட்டிற்குள் வந்துவிட்ட 4 பேரும் மிளகாய் பொடியை தூவினார்கள். அவர்களை அண்ணா மெய்யப்பன் செட்டியார் தடுக்க முயன்றபோது அவருக்கு கத்திக்குத்து விழுந்தது. லட்சுமி ஆச்சியையும் அவர்கள் சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் அண்ணா மெய்யப்பன் செட்டியார் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். லட்சுமி ஆச்சி படுகாயத்துடன் வீட்டிற்குள்ளேயே கிடந்தார்.