Nagaratharonline.com
 
திருப்புத்தூர்-சோழம்பட்டி ரோட்டை சீரமைக்க வேண்டும் கிராம மக்கள் வலியுறுத்தல்  Jul 23, 13
 
திருப்புத்தூர் - சோழம்பட்டி வழியாக தெக¢கூர் செல்லும் ரோட்டை சீரமைக¢க வேண்டும் என கிராம மக்கள் கோரிக¢கை விடுத்துள்ளனர்.

திருப்புத்தூரிலிருந்து சிங்கம்புணரி செல்லும் மெயின் ரோட்டிலிருந்து சோழம்பட்டி வழியாக தெக¢கூர் செல்லும் ரோடு 5 கிமீ தூரம் உள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர்கள் அனைத்துவிதமான வேலைகளுக¢கும் இந்த பாதையைத்தான் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த வழியாக பஸ் போக¢குவரத்து இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் 2 கிமீ தூரம் நடந்தும், சைக¢கிள், டூவீலர்களில் சென்று பஸ் ஏறுகின்றனர்.ஆறு ஆண்டுகளுக¢கு முன் போடப்பட்ட இந்த ரோடு தற்போது முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள் ளது.

தெக¢கூர், சோழம் பட்டி, நெற்குப்பை உள் ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வேலைக¢கு சென்றுவிட்டு இரவில் இவ்வழியாக வரும்போது, இருட்டில் தடுமாறி விழுந்து விபத்திற்குள்ளாகின்றனர்.