Nagaratharonline.com
 
புதுவயல் ராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி பொன்விழா  Jul 23, 13
 
புதுவயல் ராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி பொன்விழா, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் தலைமை தாங்கி பொன் விழா கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். தொழிலதிபர் கருமுத்து கண்ணன் முன்னிலை வகித்து பள்ளி நிறுவனர்களின் உருவப்படங்களை திறந்து வைத்தார். பள்ளி செயலாளர் அண்ணாமலை வரவேற்றார்.

தமிழக கடலோர காவல் படை கூடுதல் தலைவர் சைலேந்திரபாபு பொன்விழா மலரை வெளியிட்டு பேசுகையில், ‘உலகில் எதனையும் சாதிக்கும் வல்லமை படைத்தது கல்வியே. சாதாரண குடும்பத்தில் பிறந்த அப்துல்கலாம் உலகம் போற்றும் நபராக திகழ்வதற்கு காரணம் கல்வியே. உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் தமிழர்களே உள்ளனர்’ என்றார்.