Nagaratharonline.com
 
திருவான்மியூர் சிக்னல் முதல் ஆர்.டி.ஓ. வரை ரூ400கோடியில் பிரம்மாண்ட மேம்பாலம்!  Jul 15, 13
 
பழைய மகாபலிபுரம் சாலையில் பக்கிங்காம் கால்வாயில் தொடங்கும் இந்தப் பாலம் திருவான்மியூர் சிக்னலை கடந்து கிழக்கு கடற்கரை சாலையில் திருவள்ளுவர் நகர் வரை நீள்கிறது. இதற்கான திட்ட மதிப்பீடாக ரூ400 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான இறுதி வரைவு அறிக்கை இன்னும் 3 மாதங்களில் அனுப்பி வைக்கப்படும்.

அதன் பின்னர் டெண்டர் விடும் பணி நடைபெற இருக்கிறது. இந்த மேம்பாலம் அமைந்தால் டைடல் பார்க் சந்திப்பு, திருவான்மியூர் சிக்னல் சந்திப்பு, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய இடங்களில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது.