Nagaratharonline.com
 
கே.வைரவன்பட்டி ரோடு புதுப்பிக்க வேண்டும்  Jan 7, 10
 
திருப்புத்தூரில் இருந்து சிங்கம்புணரி, பொன்னமராவதி செல்லும் ரோடுகளை கே.வைரவன்பட்டி ரோடு இணைக்கிறது. இந்த வழியாக பொன்னமராவதி சென்றால் 3 கி.மீ., தூரம் குறைகிறது. காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணியால் கண்டவராயன்பட்டி - திருப்புத்தூர் ரோடு சேதமடைந்துள்ளன. இங்கு ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால் பெரிய வாகனங்கள் செல்ல முடியாது.
கே.வைரவன்பட்டி இணைப்பு ரோடு வழியாக வாகனங்கள் அதிகம் செல்கின்றன. வாகன அதிகரிப்பால் ஒன்றரை ஆண்டுக்கு முன் போட்ட ரோடு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. வாகனங்களில் செல்வோர் சிரமம் அடைகின்றனர். இதை அகலப்படுத்தி புதுப்பிக்கவேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

source : Dinamalar