Nagaratharonline.com
 
பொன்னமராவதி உலகம்பட்டி சாலையில் நிழற்குடை அமைக்கக் கோரிக்கை  Jul 13, 13
 
பொன்னமராவதி அருகே இடிக்கப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடையை மீண்டும் கட்ட வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொன்னமராவதி உலகம்பட்டி சாலையில் உள்ள நாட்டுக்கல் பகுதியில் உள்ளது பால்சாமி கடை பேருந்து நிறுத்தம். கேசராபட்டி,உலகம்பட்டி,புதூர்,கண்டியாநத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தோர் இந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கித்தான் செல்ல வேண்டும். இங்கு ஏற்கெனவே இருந்த நிழற்குடை சாலை விரிவாக்கப்பணிக்காக இடிக்கப்பட்டது.

தற்போது சாலைப்பணி முடிந்த நிலையிலும் நிழற்குடை இல்லாததால் பஸ்ஸýக்காகக் காத்திருப்போர் வெயிலிலும்,மழையிலும் வாடுகிறார்கள். எனவே இந்த இடத்தில் நகராட்சிப் பகுதிகளில் உள்ளதுபோல சிறிய நிழற்குடை அமைத்துத் தர அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.