Nagaratharonline.com
 
வேகுப்பட்டி ஊராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றக் கோரிக்கை  Jul 13, 13
 
வேகுப்பட்டி ஊராட்சியில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றித் தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு ஊர்ப் பொதுமக்கள் அனுப்பிய கோரிக்கை மனு:

பொன்னமராவதி வட்டம், வேகுப்பட்டி ஊராட்சி பாண்டிமான் கோவில் தெருவில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட ஒதுக்கப்பட்டுள்ள ஊராட்சிக்குச் சொந்தமான இடத்தில் தனி நபர் வீடு கட்டியுள்ளதால் நீர்த்தேக்கத் தொட்டி கட்ட இயலவில்லை. எனவே இந்த ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

source ; Dinamani