Nagaratharonline.com
 
10ம் தேதி,மாற்று வழியில் வைகை, குருவாயூர் ரயில்கள்  Jul 5, 13
 
விழுப்புரம் - திருச்சி மார்க்கத்தில், வாலாடி - கல்லக்குடி பழங்கானத்தம் இடையே, இரண்டாவது ரயில் பாதைக்கான சிக்னல் அமைக்கும் பணி நடப்பதால் வரும் 10ம் தேதி, வைகை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் விழுப்புரம் - மயிலாடுதுறை - தஞ்சை வழியாக மாற்று வழியில் இயக்கப்படுகின்றன. இதனால், மதுரையிலிருந்து, காலை, 6:50 மணிக்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ், திருச்சி வந்தடைந்ததும், அங்கிருந்து, காலை, 9:00 மணிக்கு புறப்படும்.
சென்னை எழும்பூரிலிருந்து காலை, 7:40 மணிக்கு இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ்,
விழுப்புரம் சென்றடைந்தும், அங்கிருந்து, காலை,10:35 மணிக்கு புறப்படும்.
குருவாயூரிலிருந்து இரவு, 8:50 மணிக்கு இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ், 9ம்தேதி திருச்சி வந்தடைந்தும், அங்கிருந்து மதியம், 2:10 மணிக்கு புறப்பட்டு, தஞ்சை வழியாக சென்னை எழும்பூர்
வந்தடையும்.