Nagaratharonline.com
 
பொன்னமராவதி அருகே ஆக்ரமிக்கப்பட்ட கோவில் இடத்தை மீட்க கோரிக்கை  Jun 29, 13
 
பொன்னமராவதி அருகே ஆக்ரமிக்கப்பட்ட கோவில் இடத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தப் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு அளித்த மனு :

பாண்டிமான் கோவில் தெருப் பகுதியில் இப்பகுதி மக்களின் குல தெய்வமான பாண்டிமான் அய்யனார் கோவில் பொங்கல் தளம் உள்ளது.

ஆண்டுதோறும் தைமாதம் பொங்கல் வைத்தும், பட்டமரத்தான் கோவில் பூச்சொரிதல் விழாவுக்கு பால்குடம்,பூத்தட்டு வைத்து எடுத்துச் செல்லவும், கலை நிகழ்ச்சி நடத்தவும் பயன்படும் இந்த இடம் தற்போது தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு கல்லுக்கால்கள் ஊன்றப்பட்டுள்ளன. எனவே இந்தத் தளம் இடம் மிகவும் குறுகியதாக உள்ளதால் தனியார் ஆக்ரமிப்பை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.