Nagaratharonline.com
 
நகை பறிப்பு  Jun 29, 13
 
அலவாக்கோட்டையைச் சேர்ந்தவர் சின்னநாச்சியார் (70). இவர் சிவகங்கையில் உள்ள தனது தங்கையின் வீட்டுக்கு வந்துவிட்டு ஊர் திரும்புவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.

ஆக்ஸ்போர்டு நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரில் ஒருவர் இவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றாராம்.

இது குறித்த புகாரின் பேரில் நகர் போலீஸார் சங்கிலியைப் பறித்துச் சென்றவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

காரைக்குடி அருகே கோவிலூரைச் சேர்ந்தவர் வெள்ளையப்பன் மனைவி அழகுசுந்தரம் (64). இவர் வெள்ளிக்கிழமை காரைக்குடி பர்மா காலனிப் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு பஸ் நிறுத்தத்துக்கு வந்துகொண்டிருந்தார்.

அப்போது பின்தொடர்ந்து வந்த நபர் அழகுசுந்தரம் அணிந்திருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். இது குறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.