Nagaratharonline.com
 
மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தொடக்கவிழா  Jun 27, 13
 
மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தொடக்கவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். மேலைச்சிவபுரி ஊராட்சிமன்ற தலைவர் பழனியப்பா பெரிய கருப்பா மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்விக்கான விலையில்லா புத்தகங்களை வழங்கி ஆங்கில வழிக்கல்வியை தொடக்கி வைத்தார்.

பொன்புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜி. கணபதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ஆங்கில வழிக்கல்வியின் அவசியம் குறித்தும், ஆங்கில வழிக்கல்வியை கொண்டு வந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும் சிறப்புரையாற்றினார். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.